கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தபின் தீர்த்தாமாடினால் பாபம் என்று சொல்லியிருக்கு, ஆகையால் வந்தபின் குளிக்காமல் இருப்பதுதான் விசேஷம்.
அதேசமயம் சிலவற்றுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் உண்டு.
உ.தா: தர்பணாதிகளுக்கெல்லாம் அங்கமாக ஸ்நானம் பண்ணவேண்டும். இங்கே கோயிலுக்குச் சென்று வந்ததால் செய்யவில்லை, அங்கமாக ஸ்நானம் என்றாகும். நித்யபடி திருவாராதனைக்கு மாத்யானிகத்திற்கு முன் அங்கமாக ஸ்நானம் உண்டு. அப்படிப் பண்ணுவதாக இருந்தால் பண்ணலாம். இவையெல்லாம் பார்த்து ஜாக்ரதையாக செய்ய வேண்டும். சிலர் திருவாராதனை எல்லாம் முடித்த பிறகு கோவிலுக்குச் செல்வார்கள்.