பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஸ்வரூபத்தாலேயும் தரிக்கிறான், சங்கல்பத்தாலேயும் தரிக்கிறான். சில விஷயங்களை நேரடியாக ஸ்வரூபத்தால் தரிப்பான். சில விஷயங்களை சங்கல்பத்தால் தரிப்பான்.
உதாஹரணத்திற்கு நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாம் அவ்வவ்விடத்திலே இருக்க வேண்டும், கடல் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் . இவை எல்லாம் சங்கல்பேண தாரகத்வம். சங்கல்பத்தினால் தரிக்கிறான் எம்பெருமான். அதனால் இரண்டு விதமான தாரகங்களும் உண்டு என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயசாரத்தில் சொல்லியிருக்கிறார்.