பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஆத்ம ஸ்வரூபத்தால் க்ரஹிக்கின்றாரா அல்லது நம் போன்றே தர்ம்பூதஞானத்தால் க்ரஹிக்கின்றாரா?

பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஸ்வரூபத்தாலேயும் தரிக்கிறான், சங்கல்பத்தாலேயும் தரிக்கிறான். சில விஷயங்களை நேரடியாக ஸ்வரூபத்தால் தரிப்பான். சில விஷயங்களை சங்கல்பத்தால் தரிப்பான்.

உதாஹரணத்திற்கு நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாம் அவ்வவ்விடத்திலே இருக்க வேண்டும், கடல் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் . இவை எல்லாம் சங்கல்பேண தாரகத்வம். சங்கல்பத்தினால் தரிக்கிறான் எம்பெருமான். அதனால் இரண்டு விதமான தாரகங்களும் உண்டு என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயசாரத்தில் சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top