பாகவத அபசாரம் என்பது மிகவும் கொடியது. பாகவத அபசாரம் பட்டால் எம்பெருமான் திருவுள்ளம் சீறும். அதனால் அபசார பட்டுவிட்டோம் என்கின்ற மனவருத்தம் ஏற்படுவதே மிகவும் நல்ல விஷயம் தான். அது ஏற்பட்டால் உடனேயே அந்தப் பாகவதரிடத்தில் போய் க்ஷமாபணம் பண்ணிக்கொள்வது உசிதம். அந்தப் பாகவதர் இப்போது இல்லை, எம்பெருமான் திருவடி அடைந்துவிட்டார் என்றால் மானசீகமாக அந்த அபராதத்திற்கு வருந்தி எம்பெருமானிடத்தில் க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளவேண்டும்.
ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்வது என்பது ஆசார்யன் திருவுள்ளபட்டால் அவர் பண்ணி வைப்பார். இப்படி நேர்ந்து விட்டது, ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக் கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது, அதைப் பண்ணிக்கொள்ளலாமா என்று அவரவர் ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்து ஆசார்யன் அதை ஆமோதித்தால் அந்தச் சமயத்தில் பண்ணிக்கொள்ளலாம்.