தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் மூழ்கி எழுவது ஸ்நானம்தான், அதற்கு ஸங்கல்பமும் உண்டு. ஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வதுதான் முறை, அதுதான் விசேஷமும் கூட. ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு செய்வார்கள், சிலர் தான் உடுத்திருக்கும் வஸ்த்ரத்துடனேயே செய்வார்கள். ஆக ஸங்கல்பம் செய்துகொண்டு, ஸ்நானாங்க தர்ப்பணம் என எல்லாமே இதற்கு உண்டு.