வேதங்களின் பதங்களுக்குத் தனி ஸ்வரம் உண்டு அது மாறாது, அப்படி மாறி வந்தாலும் அதற்குக் காரணம் இருக்கக்கூடும். அந்தக் காரணங்கள் எல்லாம் வ்யாகரணத்தில் “ஸ்வர ப்ரக்ரியா” என்ற இடத்திலும், “ப்ராதி சாக்யம்” என்ற க்ரந்தத்திலும் இருக்கிறது. பெரியவர்களிடம் கேட்டாலே அது நமக்குப் புரியும்.
வேதத்தில் பாடபேதம் என்பது கிடையாது, ஏனென்றால் அவர்கள் அன்றுமுதல் இன்று வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் நீங்கள் சொல்லக்கூடிய பாடபேதங்கள் ஆரண்யகத்தில் மட்டும் வந்திருக்கிறது, மற்றபடி ஸம்ஹிதா ப்ராஹ்மணாதி பாகங்களில் பாடபேதங்கள் கிடையாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்வரபேதமோ, பாடபேதமோ கிடையாது. சொல்லும் முறையில் வித்யாசங்கள் வரும், சிலர் நீட்டியோ உரக்கவோ சொல்வார்கள். மற்றபடி எவ்வித வித்யாசமும் இல்லை.