சிலர் திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்வார்கள். அதன் காரணம் என்ன? அப்படிச் சூடிக்கொள்ளலாம் என்றால் காது மடலின் உட்பகுதியிலா அல்லது வெளிப்பகுதியிலா எங்கு சூடிக்கொள்ளவேண்டும்?

திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்தரம் கூறியுள்ளது. “கர்ணமூலே து தாம் த்ருத்வா” என்ற வரிகளின்படி புஷ்பத்தைத் தலையிலும், திருத்துழாயைக் காதிலும் சூடிக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது.
“கர்ண மூலே” என்றிருப்பதினால் திருத்துழாயைக் காது மடலின் மேல் பகுதியில் சூடிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது மேலும், நம் பெரியவர்கள் மடலின் உள்பகுதியில் வைத்துக்கொள்வதை அடியேன் பார்த்திருக்கிறேன். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி காதின் உள்மடலில் திருத்துழாயைச் சூடிக்கொள்ளவேண்டும் என்பதாகத் தெரிகிறது. காதின் வெளிப்பகுதியில் வைத்து அடியேன் பார்த்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top