ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் தாராளமாகப் பண்ணலாம் ஆனால் அதை நாம் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்கு ஏகாதசியானாலும் சரி எதுவானாலும் சரி தினமுமே ப்ரசாதம் இருந்தால்தான் விசேஷம். ஏகாதசி அன்று நாம் ஏதாவது உத்ஸவம் பண்ணுகிறோம் என்றால், அந்த உத்ஸவத்திற்காக விசேஷமான தளிகை பண்ணாலும் நித்யபடி தளிகையை விடக்கூடாது அதுவும் சேர்த்துதான் பண்ணவேண்டும். அதனால்தான் அதற்கு உபயம் என்று பெயர், நித்யபடி ப்ரசாதத்துடன் கூட விசேஷ ப்ரசாதம். இரண்டும் கலந்திருக்கின்றபடியால்தான் அதற்கு உபயம் என்று பெயர். இரண்டையும் தளிகை பண்ணலாம். ஆனால் ஏகாதசியன்று ப்ரசாதத்தை நாம் உட்கொள்ளக்கூடாது.