பர்தாவை இழந்தவர் பொதுவாக அந்த ஒரு வருஷ காலத்திற்கு தீர்த்தயாத்திரை போகக்கூடாது என்றிருக்கிறது. ஆகையால் அந்தச் சமயம் திவ்யதேசங்கள் போய் உத்ஸவங்கள் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதேபோல் ஆசார்யனை நேரில் சென்று சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ப்ரமேயம் வந்தால் அவரைச் சேவித்ததனால் தவறொன்றுமில்லை.