சுந்தரகாண்டம் பாராயணம் ஆரம்பிக்கும் முன் விஷ்வக்ஸேன ஆராதனம் எல்லாம் பண்ணிவிட்டு மஹாசங்கல்பம் ஒன்று பண்ணிக்கொள்ள வேண்டும்.
பெருமாளுக்குத் திருவாராதனம் எல்லாம் பண்ணி, புஸ்தகத்திற்கு பூஜையெல்லாம் பண்ண வேண்டும். பின் மஹாசங்கல்பம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதில் எந்தப் பலனை உத்தேசிக்கிறோமோ அதைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதாவது இந்தப் பலனுக்காக இந்தச் சுந்தரகாண்ட பாராயணம் செய்கிறேன் என்று சங்கல்பம் பண்ணலாம். இதை அந்தந்த வாத்யார்கள் பண்ணி வைப்பார்கள். இவை எல்லாவற்றிற்குமே பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று முக்கியமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் எந்தப் பலனுக்கு என்பதை பெருமாளிடம் மனதுக்குள் ப்ரார்தித்துக் கொண்டு, வாக்கினால் சங்கல்பம் பண்ணும் பொழுது பகவத் ப்ரீத்யர்தம் அல்லது ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்தம் என்று சொல்லி பண்ணால்கூட போதும் என்று சில பெரியோர்கள் சொல்கிறார்கள்.