ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்து வந்தால் சேர்த்துப் பண்ணலாம். ஆனால் வேறு ஊரில் வெவ்வேறு இடத்தில் இருந்தால் குடும்பம் பிரிந்துவிட்டதாக அர்த்தமாகும். அந்தச் சமயம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். தகப்பனாருடைய சொத்து விபாகம் ஆகி விட்டால் தனித்தனியாகத்தான் பண்ண வேண்டும்.
சேர்ந்தே பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒருமுறை தனியாகப் பண்ணும்படி நேர்ந்துவிட்டால் அதற்குப் பிறகு மீண்டும் சேர்ந்து பண்ணக்கூடாது தனியாகத்தான் பண்ணவேண்டும்.
குறிப்புகள்:
தனித்தனியாக பண்ணுவதில் இரண்டு விதம் உள்ளது. ஹோமம் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும். ஆனால் தளிகை பண்ணும் பொழுது எல்லா தளிகையும் ஒன்றாகப் பண்ணிவிட்டு ப்ரசாதம், பாயாசம், பருப்பு மாத்திரம் தனித்தனியாகப் பண்ணவேண்டும். மற்றபடி கரியமுதுகள், பக்ஷணங்கள் எல்லாம் ஒன்றாகப் பண்ணலாம். மேல் சொன்ன மூன்றை மாத்திரம் தனியாகப் பண்ணி அந்தந்த ஸ்வாமிகளுக்குத் தனித்தனியாக அமுதுசெய்விக்க வேண்டும் என்று ஒரு வழக்கம்.அவரவர் அகத்து வாத்யார்களை கேட்டால் மேலும் விரிவாகச் சொல்லுவார்கள்.