தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தில் அடியேனுக்குத் தெரிந்தவரை ஸமாஶ்ரயணம் நடக்கும் பொழுதே கூடவே பரந்யாஸமும் நடக்கிறது. அவர்கள் த்வய மந்த்ரத்தை உபதேசம் பண்ணுகிறார்கள். அதை உச்சாரணம் பண்ணச் சொல்லி சொல்லுகிறார்கள். எம்பெருமானே உபாயம் என்பதாகச் சொல்லுகிறார்கள். த்வய மந்த்ரம் என்பது ஶரணாகதி மந்திரம். ஸமாஶ்ரயணத்தில் முக்கியமாக அஷ்டாக்ஷர உபதேசமும், ஶரணாகதியில் த்வய மந்த்ர உபதேசம் என்பதாக ஒரு வழக்கம் முற்காலத்தில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நாம் ஸமாஶ்ரயணத்தின் பொழுது எல்லாவற்றையும் பண்ணுகிறோம்.
அடியேன்கூட சில தென்னாசார்ய பெரியோர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படியே சொன்னார்கள். அதாவது ஸமாஶ்ரயண காலத்திலேயே த்வய மந்த்ரத்தை உச்சாரணம் பண்ணுகின்ற படியினால் அது பரந்யாஸம் ஆகிவிட்டதாகத் தான் கணக்கு. ஆகையால் மீண்டும் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்பதைச் சொல்வதற்காகதான் பரந்யாஸம் பண்ணவேண்டாம் என்று சொல்கிறார்கள். முதலியே ஆகிவிடுகிறப்படியால் அப்படிச் சொல்கிறார்கள் என்று அடியேன் புரிந்து கொண்டிருக்கிறேன்.