3) மஹாப்ரதோஷம் சமயம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க & பொதுவாக மற்ற எல்லாம் (ஶ்லோகம்) நிஷேதமாய் இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா – இது விஷ்ணுபரமா? ந்ருஸிம்ஹபரமா?(முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சார் சுவாமி வ்யாஸம்) ந்ருஸிம்ஹ பர அனுஸந்தாந்தனத்துடன்  என்று கொண்டு, சொல்லலாமா ? ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் / ப்ரதோஷ ஆராதனம் போது ப்ரதோஷ கால விலக்கு என்றில்லாமல் (ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஶ்லோகம், பாசுரம் மட்டும் என்ற) எந்த அநுவாகம், ஶ்லோகம், பாசுரம் வேண்டுமானாலும் ஸேவிக்கலாமா ?

ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது. ந்ருஸிம்ஹபர அனுஸந்தாந்தனத்துடன்  என்று கொண்டு, சொல்லலாமா என்றால் நாமாக க்ருஹத்திலிருந்து அப்படி அனுசந்தானம் பண்ணிக்கொண்டு சொல்லுவதுதென்பது பெரியோர்கள் வழக்கம் இல்லை. மாறாக ந்ருஸிம்ஹன் பெருமாள் சந்நிதியில் சில சமயம் திருமஞ்சனம், விசேஷ ஆராதனம், பாராயணம் இவையெல்லாம் நடக்கும். அதில் நாம் கலந்துகொள்ளலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் ப்ரதோஷ ஆராதனம் போது பெருமாள் சந்நிதியில் அதற்கென்று வழக்கம் ஒன்றுயிருக்கும். அந்த வழக்கத்தில் என்னென்ன சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் அனுசந்தானம் பண்ணலாம் என்று ஆகமத்திலேயே இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top