ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது. ந்ருஸிம்ஹபர அனுஸந்தாந்தனத்துடன் என்று கொண்டு, சொல்லலாமா என்றால் நாமாக க்ருஹத்திலிருந்து அப்படி அனுசந்தானம் பண்ணிக்கொண்டு சொல்லுவதுதென்பது பெரியோர்கள் வழக்கம் இல்லை. மாறாக ந்ருஸிம்ஹன் பெருமாள் சந்நிதியில் சில சமயம் திருமஞ்சனம், விசேஷ ஆராதனம், பாராயணம் இவையெல்லாம் நடக்கும். அதில் நாம் கலந்துகொள்ளலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் ப்ரதோஷ ஆராதனம் போது பெருமாள் சந்நிதியில் அதற்கென்று வழக்கம் ஒன்றுயிருக்கும். அந்த வழக்கத்தில் என்னென்ன சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் அனுசந்தானம் பண்ணலாம் என்று ஆகமத்திலேயே இருக்கின்றது.