இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன தோன்றுகிறது என்றால் காலக்ஷேபம், ஸ்தோத்ரம் திவ்ய ப்ரபந்த வகுப்புக்கள், எல்லாம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்க கூடியவையாக இருக்கும். புரட்டாசி ஶ்ரவணோத்சவம் என்பது வருடத்தில் பத்து நாட்கள் ஏற்படுவது. அதில் பிரசாதம் சாதிக்கும் கைங்கர்யம் என்பது அந்தப் பத்து நாட்களுக்கே உரியதாக இருக்கின்றபடியால், அதை ஒரு விசேஷ கைங்கர்யமாக நினைத்துக் கொண்டு, அந்தச் சமயத்தில் அதற்கு ப்ராதான்யம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
குறிப்புகள்
இந்தக் கேள்வியில் சொல்லப்பட்ட கைங்கர்யங்கள் அதாவது பாகவதர்களுக்குத் ததீயாராதனை பிரசாதம் சாதிப்பதோ அல்லது காலக்ஷேபம், ஸ்தோத்ரம், திவ்யப்ரபந்தம் வகுப்புகளில் போய் கலந்து கொள்வதோ எல்லாமே அனுஞ்யா கைங்கர்யம் தான். விதிக்கப்பட்ட கைங்கர்யங்கள் இல்லை. அதனால் ஒரு கைங்கர்யம் உசத்தி ஒரு கைங்கர்யம் தாழ்த்தி என்பது கிடையாது.
இதுதான் செய்யவேண்டும், இது செய்யக்கூடாது என்கின்ற விதி எதுவுமே கிடையாது. ஏனென்றால் எல்லாமே நாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கைங்கர்யங்கள் தான். எதுவும் விதித்த கைங்கர்யங்கள் இல்லை. பண்ணுவது உசத்தி, பண்ணாமல் இருந்தால் தோஷம் எதுவும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பத்து நாட்கள் பிரசாதம் சாதிக்கப்போவது இன்னும் உசிதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.