சூர்ய க்ரஹணத்திற்கு, க்ரஹணம் பிடிக்கின்ற ஜாமத்தைத் த்விர்த்துவிட்டு முன் நான்கு ஜாமம் சாப்பிடக்கூடாதென்று இருக்கிறது. இந்த க்ரஹணம் பிடிப்பது பகல் நான்காவது ஜாமம், ஆக முன்னாடி நான்கு ஜாமம் என்பது முதல் நாள் இரவு மூன்று மணிக்குப்பின் சாப்பிடக்கூடாது. க்ரஹணம் விட்ட பின்னர் சூர்யனை பார்த்துவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
இந்த முறை க்ரஹணகாலம் சாயங்காலமானபடியால், க்ரஹணகாலத்திலேயே சூர்யன் அஸ்தமனமாகுகிறது. க்ரஹணம் விட்டு சூர்யனைப் பார்க்க முடியாது, மேலும் சூர்யனைப் பார்த்துவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்றபடியால் மறுநாள் காலைதான் சாப்பிடவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஶாஸ்த்ரப்படி அன்றையதினம் முழுவதும் சாப்பிடக்கூடாது.