ஆவணி (ஸிம்ஹ மாஸம்)  ஶ்ரவணம் நக்ஷத்ரம் தினத்தில் தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும் ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப் படுகிறதா ?

ஆவணி ஶ்ரவணம், திருவோணத்தில்தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும், ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப்படுகிறது.
சிலர் ஹயக்ரீவ ஜயந்தியை பௌர்ணமி திதி ப்ரதானமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள். சந்த்ரமான கணக்கில், ஶ்ராவணத்தில் என்ற கணக்கின்படி கொண்டாடுகிறார்கள். சில நேரம் ஆடி மாதத்திலும் இது வரும்.
ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராம நவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போல் இதில் பெரியளவு வ்ரதங்கள் என்றெல்லாம் இல்லாதபடியினால், கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது, விசேஷமாக திருவாராதனை என்பது மட்டும் என்கிறபடியாலும், மேலும் அகத்திலும் விசேஷ திருவாரதனை என்று சொல்லாதபடியினாலும் அந்தந்தக் கோவிலின்படி அவ்வழக்கத்தை நாம் பின்பற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top