17) ஶ்ரவண-துவாதசி அன்று 1) ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், த்வாதஶி பாரணை பண்ணலாமா ? 2) அல்லது த்ரயோதசியில் தான் பாரணை என்று இருக்கும் போது, ஏகாதசியில் கௌணமாகவும் துவாதசி ப்ரதானமாகவும் கொண்டு உபவாஸ வ்ரத அனுஷ்டானம் செய்யலாமா ?

ஶ்ரவாண துவாதசிக்கும், ஶ்ரவண வ்ரதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஶ்ரவண வ்ரதம் என்பது காம்ய வ்ரதம் வேண்டுமென்றால், ஒரு பலனுக்காகவோ, எம்பெருமானுக்காகவோ இருக்கலாம். வ்ரதம் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஶ்ரவண துவாதசிக்கு நித்யம் என்று பெயர் அதாவது கட்டாயமாக வ்ரதம் இருக்கவேண்டும்.ஶ்ரவண வ்ரதத்திற்கும், ஶ்ரவண துவாதசிக்கும் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லை.
ஏகாதசி, ஶ்ரவண துவாதசி இரண்டு தினமும் உபவாஸம் இருக்கவேண்டும். த்ரயோதசியில்தான் பாரணை. ஶரீர காரணமாக ஒருநாள் தான் இருக்க முடியும் என்றிருந்தால், ஏகாதசியன்று பலகாரம் போல பண்ணிவிட்டு. ஶ்ரவண துவாதசியில் உபவாஸத்தை ப்ரதானமாக வைத்துக்கொள்வது என்று பெரியோரகளின் வழக்கத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top