ஶ்ரவண-துவாதசி வ்ரதம் ( ஸ்ரீஸந்நிதி நிர்வாஹம்) வேதை – நக்ஷத்திரம், திதி – விலக்கப் பட வேண்டியது என்ன ? நக்ஷத்திரம்-திதி (ஶ்ரவண-த்வாதஶி) ஸம்பந்தம் குறைந்தது எவ்வளவு நாழிகைகள் இருக்க வேண்டும்?

ஶ்ரவண துவாதசி வ்ரதத்தில் முனித்ரயம், அஹோபிலம் என்று இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது. இதில் முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஶ்ரவணமும், துவாதசியில் சிறிதளவு சேர்ந்திருந்தாலே போதும் அன்றையதினம் ஶ்ரவண துவாதசி வ்ரதம். அதாவது என்றாவது ஒருநாள் பகலிலேயோ, இல்லை சாயங்காலத்திலோ கொஞ்சம் சேர்ந்திருந்தாலே அன்று ஶ்ரவண துவாதசி.
ஸ்ரீஸந்நிதி ஸம்ப்ரதாயத்தில் ஸாயங்கால வ்யாப்தி வரை ஶ்ரவணமும் துவாதசியும் சேர்ந்திருந்தால்தான் ஶ்ரவண வ்ரதம். அதை அவர்கள் அறிவிப்பார்கள் அதன்படி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top