துலா ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி அடியேன் பஞ்சாங்கத்தில் துலா ரவி 58-28 நாழிகையில் பிறக்கிறது என்றுள்ளது. அப்படியென்றால் தர்ப்பணம் என்று செய்ய வேண்டும்? திங்கட்கிழமையா அல்லது செவ்வாய் கிழமையா? சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு தர்ப்பணம் பண்ண வேண்டுமா? அல்லது முன்பா? எப்போது தர்ப்பணம் பண்ண வேண்டும்?

செவ்வாய் கிழமை அன்றுதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
துலா விஷுவிற்கு மாசம் பிறக்கும் முன் 10 நாழிகை, பின் 10 நாழிகை புண்யகாலமாகும். இதில் 58-28 க்கு மாசம் பிறக்கிறது என்றால், செவ்வாய் கிழமை விடியற்காலை மாசம் பிறக்கிறது. அதாவது சூர்யோதயத்திற்கு முன் சுமார் 5.30மணிக்கு மாசம் பிறக்கிறது. அதற்கு முன் தர்ப்பணம் பண்ண முடியாது.
சூர்யோதயம் ஆனவுடன் தீர்த்தமாடி, சந்தியாவந்தனம் பண்ணாமல் எந்தக் கார்யமும் பண்ணக்கூடாது. ஆகையால் தீர்த்தமாடி, சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு தர்ப்பணம் செவ்வாய் கிழமை காலையிலேயே பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top