பத்து நாள் பங்காளிகள் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? அதேபோல் 3 பங்காளிகள் யார் , தாயாதிகள் யார்? என்று விளக்கப்ரார்த்திக்கிறேன்.

தாயாதிகள் என்றால் சொத்தைப் பங்குகொள்பவர்கள் என்று அர்த்தம். அதாவது ஒரு அப்பாவிற்கு 2 அல்லது 4 புத்திரர்கள் இருந்தால், தந்தையாரின் சொத்தை புத்திரர்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். தாயத்தை அதாவது சொத்தை பங்குப்பொட்டுக்கொள்வதால் பங்காளிகள் என்று தமிழில் சொல்கிறோம்.
இப்படியாக ஒரு அப்பா அவருக்கு இரண்டு புத்திரர்கள், இவர்கள் இரண்டாம் தலைமுறை. பின் இந்தப் புத்திரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு புத்திரர்கள் என்றால், அவர்கள் மூன்றாம் தலைமுறை. இப்படியாக ஏழு தலைமுறை வரை உள்ளவர்கள் 10 நாள் பங்காளிகள், எட்டாம் தலைமுறையிலிருந்து 14 தலைமுறை வரை உள்ளவர்கள் 3 நாள் தாயாதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top