அஷ்டகா ஶ்ராத்தம் பற்றிய குறிப்பு.

வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 13 அன்று மாசி மாசப்பிறப்பும் அஷ்டகா ஶ்ராத்தமும் ஒரே நாளில் செய்யும்படி வருகிறது.
முதலில் மாசப்பிறப்பு ஸங்க்ரமண தர்ப்பணத்தைப் பண்ணிவிட்டு பின் அஷ்டகா ஶ்ராத்ததைப் (அஷ்டகா தர்ப்பணத்தை) பண்ணவேண்டும்.
இவ்விரண்டையும் சேர்த்து ஒரே தர்ப்பணமாக பண்ணலாமா?
பொதுவாக இவ்விரண்டு தர்ப்பணத்தையும் சேர்த்து பண்ணமுடியாது. ஏனென்றால் இவ்விரண்டிற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.
மாசப்பிறப்பு தர்ப்பணம் என்பது அமாவாஸ்யை தர்ப்பணம் போல் பித்ரு வர்கம், மாத்ரு வர்கம் என இரண்டையும் உத்தேசித்து செய்வதுண்டு.
மாசப்பிறப்பு தர்ப்பணத்தில் நம்முடைய மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹி என இவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்வதாக சங்கல்பம் செய்வது கிடையாது.
ஆனால் அஷ்டகா ஶ்ராத்தத்திலே அல்லது அஷ்டகா தர்ப்பணத்திலே அவர்களுடைய பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்யவேண்டும்.
உதாஹரணமாக, கோத்ரானாம் ஷர்மனாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் என்றும், மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்றும் கூறி சங்கல்பத்தில் செய்யவேண்டும். அஷ்டகா ஶ்ராத்தத்தில் இப்படி ஒரு அதிகப்படி உண்டு.
மேலும் அவர்களுக்கென்று தனியாக புக்னம் போட்டு, அதாவது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிக்குத் தனியாக புக்னம் போட்டு தனியாகத் தர்ப்பணம் செய்பவர்கள் உண்டு. சிலர் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹர்க்கு இருக்கும் புக்னத்திலேயே இதையும் சேர்த்துப் பண்ணிவிடுவார்கள். இப்படி அதிலேயே பண்ணுவதானால், அமாவாஸ்யை தர்ப்பணத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் வராது ஆனால் சங்கல்பத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதாவது அவர்கள் பெயரைச் சொல்லி மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் என்று சேர்த்துச்சொல்லி சங்கல்பம் பண்ணவேண்டும்.
ஆகையால் இந்த அஷ்டகா ஶ்ராத்தத்தைத் தனியாகப் பண்ணவேண்டும்.
சிலர் அஷ்டகா ஶ்ராத்தத்தில் ஒரு வர்கத்திற்கு மட்டும்தான் (அதாவது பித்ரு வர்கத்திற்கு மட்டும்) தர்ப்பணம் பண்ணுகிறார்கள் மற்றொரு வர்கத்திற்குப் பண்ணுவதில்லை. அவர்களும் மாசப்பிறப்பு தர்ப்பணம் மற்றும் அஷ்டகா தர்ப்பணத்தைத் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும்.

குறிப்பு:
சிறிதும் வித்தியாசமே இல்லாமல் மாசப்பிறப்பு தர்ப்பணத்தைப் போலவே அஷ்டகா தர்ப்பணத்தைச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் இரண்டு தர்ப்பணத்தில் ஏதாவது ஒன்றை பண்ணால் போதும். ஆனால் அவ்வாறு செய்பவர்கள் இருப்பதாக அடியேனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அப்படிச் செய்வார்களேயானால் ஒரே ஒரு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top