ஏகாதசியன்று அன்னத்தை பெருமாளுக்கு தாராளமாக நிவேதனம் பண்ணலாம். ஆனால் அதை நாம் சாப்பிட முடியாது. நாம் சாப்பிடாத ஒன்றை பெருமாளுக்கு ஸமர்ப்பணம் பண்ண வேண்டும் என்று பெருமாளும் கேட்கவில்லை. நமக்கு என்னவோ அதுவே பெருமாளுக்கு, அவனுக்கு என்னவோ அதுவே நமக்கு. அதனால் ஏகாதசி அன்று அன்னத்தை நிவேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. கோவில்களில் சுத்த அன்னம் என்று விசேஷமாக பண்ணுவார்கள். கோவில்களில் அது பண்ணாமல் இருக்க கூடாது. ஆனால் நாம் அதைச் சாப்பிடக்கூடாது என்ற கணக்கு இருக்கின்றது.
நித்யமுமே ப்ரசாதம் நிவேதனம் பண்ண வேண்டும். அது முடியாத நாட்களில் பால் பழங்கள் அம்சை பண்ணலாம்.
குறிப்புகள்:
நித்யமுமே பால் பழங்கள் அம்சை பண்ணலாம். இவை மட்டுமே போதுமா என்றால் அது மட்டும் போறாது. ப்ரசாதம் ரொம்ப முக்கியம். சுத்த அன்னம் என்று பெயர். பால் பழமோடு சேர்த்து அம்சை பண்ண வேண்டும். ப்ரசாதம் பண்ண முடியாத பொழுது பால் பழமோ அல்லது தயிர் பழமோ மட்டும் பண்ணலாம் என்று வைத்து கொள்ளலாம்.