பாரணை என்றால் அகத்திக்கீரை, சுண்டைக்காய் உப்பில்லாமல் இருக்க கூடியது. துவாதசியன்று பாரணையை பல்லில் படாமல் சாப்பிட வேண்டும் என்று கணக்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் மூன்று கவளம் என்று பெரிதாக நியமங்கள் கிடையாது. ஆகாரத்திற்கு முன் அதைச் சாப்பிட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம். சாப்பிட வேண்டும் என்பதற்காக சில பேர் ஒரே ஒரு இலையை மட்டும் சாப்பிட்டு விட்டுவிடுவார்கள். அப்படி இல்லாமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்கின்ற ரீதியில் மூன்று கவளம் என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி மூன்று கவளம் என்று கணக்கு எதுவும் கிடையாது.