எப்போதெல்லாம் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும் உ.தா ஆசார்யன் தனியன் சேவிக்கும் சமயமா அல்லது சந்தியாவந்தனம் சமயமா? எத்தனை முறை ஜபிக்க வேண்டும்?? அதன் ப்ரபாவம் மற்றும் பலன், வித்வான்களின் திருவாக்கினால் அறியப்பெற்றேன் ஆனால் எப்பொது, எப்படி, எத்தனை முறை சொல்ல வேண்டும் என்ற தெளிவு மட்டும் இல்லை.

சந்த்யாவந்தனத்தில் மூன்று வேளையும் அஷ்டாக்ஷர ஜபம் பண்ண வேண்டும் என்று இருக்கின்றது. அதைத் தவிர தனியாகச் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. சந்த்யாவந்தனத்துடன் சேர்த்து செய்தாலே போதும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஆஹ்நிக க்ரந்தங்களிலிருந்தோ அல்லது ஆசார்யனிடம் கேட்டோ தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top