சந்த்யாவந்தனத்தில் மூன்று வேளையும் அஷ்டாக்ஷர ஜபம் பண்ண வேண்டும் என்று இருக்கின்றது. அதைத் தவிர தனியாகச் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. சந்த்யாவந்தனத்துடன் சேர்த்து செய்தாலே போதும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஆஹ்நிக க்ரந்தங்களிலிருந்தோ அல்லது ஆசார்யனிடம் கேட்டோ தெரிந்துகொள்ளலாம்.