அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் செய்துகொள்ள ஆசை. ஆனால் அகத்தில் இருப்பவர்கள் ஏதோ காரணங்கள் கூறி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். என் இருபது வயது மகளுக்கு அதன் முக்கியத்வத்தை கற்றுக்கொடுக்க முடியவில்லை ஏனென்றால் ஆத்தில் இருக்கும் பெரிய்வர்கள், என் அகத்துக்காரார் என அனைவரும் இந்த சம்ஸ்காரங்கள் முக்கியம் இல்லை என்று கூறுகிறார்கள். எங்கள் ஆசார்யன் இருக்கும் இடம் வெகு தொலைவில் இருப்பதால் அதையே பல முறை காரணம் காட்டி ஆசார்யன் தரிசனம் பெறவும் தடுக்கின்றனர். என் மகளாவது இந்த ஸம்ப்ரதாயத்தில் வர ஆசை கொண்டுள்ளேன். மாற்றம் ஏற்பட ஏதேனும் வழியுண்டா?

பரந்யாஸம் செய்துகொள்ள முடியாமல் ப்ரச்சனைகள் இருந்து வந்தால், ஸ்வாமி தேஶிகனுடைய ந்யாஸதஶகத்தை நித்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டிருந்தால் பெருமாளே உங்களுக்கு வழி காட்டுவார்.
அடைக்கலப்பத்து சேவித்து கொண்டு இருக்கலாம். ஆசார்ய சம்பந்தம் , ஆசார்ய அனுக்ரஹம், பெருமாளுடைய அனுக்ரஹம் கட்டாயம் கிடைக்கும். அவரே வழி காட்டி, அவரே பரந்யாஸம் பண்ணி வைப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top