என் தகப்பனார் ஜூன்2021 அன்று பரமபதித்துவிட்டார். வரும் ஜூன் ஒன்றாம் தேதி அவருக்கு வர்ஷாப்தீகம் வருகிறது. அம்மா என்னுடன் இருக்கிறாள். a. கயா ஶ்ரார்த்தம் எப்போது செய்தல் வேண்டும்? அதன் மகத்துவம் என்ன? b. அக்ஷய வடம் என்றால் என்ன? c. இராமமேஸ்வரம் சேது ஸ்நானமும் கயா ஶ்ரார்த்தத்துடன் செய்ய வேண்டுமா? d. இவை அனைத்தும் செய்த பின் தான் க்ஷேத்ராடனம் செல்ல வேண்டுமா? e. எனது தாயாருக்கு உடம்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால் கயா போன்ற ஸ்தலத்திற்கு அவரால் வர இயலாது. அடியேனும் என் மனைவியும் மட்டும் சென்று கயா ஶ்ரார்த்தம் சேது ஸ்நானம் செய்யலாமா?

வருஷாப்தீகம் முடிந்தபின் தான் கயா ஶ்ரார்த்தம் பண்ணவேண்டும். கயா ஶ்ராத்தம் பற்றி ஸ்ரீமத் இராமாயணத்திலே குறிப்பு இருக்கிறது “ஏஷ்ட வ்யா பஹவா புத்ரா: யத் ஏகோபி கயாம் வ்ரஜேத்” என்று. அதாவது பல புத்திரர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் யாராவது ஒருத்தராவது கயா ஶ்ரார்த்தம் பண்ண மாட்டார்களா என்பதற்காக. ஆக கயா ஶ்ராத்தம் மிகவும் முக்கியமானது.
அக்ஷய வடம் என்பது அங்கு இருக்கும் புண்ணிய ஸ்தலம்
பொதுவாக வடதேச யாத்திரை போய்விட்டு வந்தால் தெற்கே ஒரு யாத்திரை போவது என்ற ஒரு வழக்கம் இருக்கிறது. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமேஶ்வரம் போகும் வழக்கில்லை, சேது ஸ்நானம் பண்ணுவது தான் இருக்கிறது. தனுஷ்கோடி போய் சேது ஸ்நானம் பண்ணும் வழக்கம் உண்டு அது அவசியம் பண்ண வேண்டும்.
இவை அனைத்தும் பண்ணிவிட்டு தான் க்ஷேத்ராடனம் போக வேண்டும் என்ற அவசியமில்லை.வருஷாப்தீகம் ஆன பின் க்ஷேத்ராடனம் போகலாம்.
தாயாரால் வர முடியாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளை போய் பண்ணிவிட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top