பொதுவாக இரும்பு பாத்திரத்தில் அமுது செய்விக்கக்கூடாது என்று இருக்கிறது. ஆகையால் இரும்பில் பண்ணுவதாக இருந்தால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி தான் அம்சை பண்ண வேண்டும்.
மேலும், எவர்சில்வரும் ஒரு இரும்பு பாத்திரமாகிறபடியால் அதில் நேரே அம்சை பண்ணுவது உசிதமாக இருக்காது. அதை வேறு பாத்திரத்தில் மாற்றி அமுது செய்விக்க வேண்டும்.வெங்கலம், வெள்ளி, பித்தளை, மற்றும் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் அம்சை பண்ணலாம்.
முக்கியமாக, பெருமாளுக்கு அம்சை பண்ணும் பாத்திரம் நாம் உபயோகப்படுத்தும் பாத்திரமாக இருத்தல் கூடாது. உள் பாத்திரம் என்று சொல்வார்கள் அது நம் உபயோகத்திற்கு வராது.