கன்யா மரண விஷயத்தில் ஞாதிகளுக்கும் 10 நாள் தீட்டு என்று புத்தகங்களில் காணுகிறோம். ஆனால் கல்யாணமே ஆகாமல் இருக்கும் விஷயத்தில் கன்யா மரணமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒன்றிரண்டு கேள்விப்படுவதில் பெரியவர்கள் மூன்று நாள் தான் தீட்டு காத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. விவாஹம் ஆகாத ஸ்த்ரீ விஷயத்தில் பர்த்தாவிற்கு மூன்று நாள் தீட்டு ஆகின்றபடியினால், பாரியைக்கும் மூன்று நாள் தீட்டு.
விவாஹம் ஆன ஆண் பிள்ளையாக இருந்தால், அத்தை ஆகின்றபடியால் மூன்று நாள் தீட்டு. விவாஹிதையான பெண் பிள்ளையாக இருந்தால் ஒன்றரை நாள் தீட்டு. அவிவாஹிதையான ஆணுக்கோ, பெண்ணுக்கோ அத்தை போனால் ஸ்நானம் மட்டுந்தான்.