சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டும் இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்பது சரிதான். பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வதால் மடி ஆசாரமாக செய்யாவிடில் அது 32 அபச்சாரத்தில் ஒன்றாக ஆகிவிடும். ஆகையால் அதை முடிந்தளவு தவிர்த்தல் வேண்டும்.
அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை இயன்றளவு முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அதுவே ரொம்ப நல்ல விஷயம் முடிந்தளவு ஆசாரமாக செய்யுங்கள்.