சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டுமா? இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்று கேள்விபட்டுள்ளேன். ஒரு ப்ரபந்னன் அப்படி மடி ஆசாரமாக செய்யாவிட்டால் அது அவனது மோக்ஷத்திற்கு தடையாகுமா? அல்லது பெருமாள் சிறு சிக்ஷை மட்டும் கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா? அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த சந்தேகம், இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.

சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டும் இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்பது சரிதான். பெருமாளைத் தொட்டு திருமஞ்சனம் செய்வதால் மடி ஆசாரமாக செய்யாவிடில் அது 32 அபச்சாரத்தில் ஒன்றாக ஆகிவிடும். ஆகையால் அதை முடிந்தளவு தவிர்த்தல் வேண்டும்.
அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை இயன்றளவு முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அதுவே ரொம்ப நல்ல விஷயம் முடிந்தளவு ஆசாரமாக செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top