புஷ்பங்கள் கடையிலிருந்து வாங்குவதைக் காட்டிலும், நாமே ஆத்திலிருந்து எடுத்து ஸமர்பிப்பது விசேஷம் அல்லது நாமாகவே எங்காவது போய் பூ பறித்து வந்து ஸமர்பிப்பதும் விசேஷம்.
கடையில் பைசா கொடுத்து வாங்குவது க்ரயக்ரீதம் என்று பெயர், அது சாதாரனமானது. அப்படி வாங்கினால் “பூ: புவ: ஸ்வ:” என்றோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்திரம் சொல்லியோ ஜலத்தால் ப்ரோக்ஷணம் பண்ணி எடுத்துக்கொள்ளலாம். ப்ரோக்ஷணம் செய்யும் போது நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது ஏனென்றால் புஷ்பத்தில் நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது என்றிருக்கிறது.

