வெளியில் இருந்து பூக்கள் வாங்கும் சமயம் அவர்கள் எந்த அளவு ஆசாரமாக இருக்கின்றார்கள் என்று தெரியாது. பெருமாளுக்கு ஸம்பர்பிக்கும் முன் வெளியில் இருந்து வாங்கிய புஷ்பங்களை சுத்தி செய்ய ஏதேனும் மந்திரம் உண்டா? அல்லது நீர் தெளித்தால் போதுமா?

புஷ்பங்கள் கடையிலிருந்து வாங்குவதைக் காட்டிலும், நாமே ஆத்திலிருந்து எடுத்து ஸமர்பிப்பது விசேஷம் அல்லது நாமாகவே எங்காவது போய் பூ பறித்து வந்து ஸமர்பிப்பதும் விசேஷம்.
கடையில் பைசா கொடுத்து வாங்குவது க்ரயக்ரீதம் என்று பெயர், அது சாதாரனமானது. அப்படி வாங்கினால் “பூ: புவ: ஸ்வ:” என்றோ அல்லது திருவஷ்டாக்ஷர மந்திரம் சொல்லியோ ஜலத்தால் ப்ரோக்ஷணம் பண்ணி எடுத்துக்கொள்ளலாம். ப்ரோக்ஷணம் செய்யும் போது நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது ஏனென்றால் புஷ்பத்தில் நிறைய ஜலம் சேர்க்கக்கூடாது என்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top