ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணக்கூடாது என்று சுதர்சனம் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் ஆண்டவன் ஆஶ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்த்ரீ திருவாராதனம் செய்யும் முறையில் அனைத்து குறிப்பும் அதாவது ஸ்த்ரீகள் பெருமாளை தொட மந்திரம் உட்பட எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை பின்பற்றுவது என்று குழப்பமாக உள்ளது.

ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணுவது என்பது வழக்கத்தில் இல்லை. புருஷர்களே தொட்டு ஆராதனம் பண்ணுவது வழக்கம்.
புருஷர்கள் அகத்தில் இல்லாத சமயங்களில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்திற்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணலாம். சாளக்ராமத்தைச் சுற்றி இருக்கும் இடத்தை துடைத்து சுத்தம் செய்து, கோலம் போட்டு, விளக்கேற்றி வைக்கலாம். இதுவே விதிக்கப்பட்ட விஷயங்கள். வேறு புஸ்தகங்களில் வேற மாதிரி எழுதி இருக்கு என்றால் அது எந்த யுக தர்மத்தை எப்படி எழுதி இருக்கின்றனர் என்பதை எல்லாம் பார்த்து ஆராய்ந்து சரியாக புரிந்துகொள்ள வேண்டும். என்ன எழுதபட்டிருக்கிறது என்பதை விட என்ன அனுஷ்டானத்தில் இருக்கின்றது என்பதை முன்னிட்டு தான் பல ஸம்ப்ரதாய வழக்கங்கள் இருந்து கொண்டு வருகின்றன.
வழக்கத்தில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தை தொடுவது என்பது கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top