முனித்ரய ஸம்ப்ரதாயம் பற்றிய சந்தேகம்: ஶ்ரீ ஜயந்தி, ஶ்ரீ ராம நவமி, ஶ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி போன்ற நாட்களில் நாம் வ்ரதம் இருந்து மறுநாள் பாரணை பண்ணவேண்டும் என்றிருக்கிறது, அப்படியானால் அன்றைய நாட்களில் எம்பெருமானுக்கு பண்ணிய பானகம், வடைபருப்பு, கோசம்பரி போன்றவைகளையும் உட்கொள்ளக்கூடாதா? எம்பெருமானுக்குப் பண்ணியதை உட்கொள்ளாதது சரியா? மேலும் இவைகளை அடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா?

உபவாஸ தினத்திலே எம்பெருமானுக்குப் பண்ண வடைபருப்பு , பானகம் முதலியவற்றை உபவாஸம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. பலகாரம் பண்ணுபவர்களுக்குக் கொடுக்கலாம். உபவாஸ வ்ரதம் இருக்கிறபடியால் அதைச் சாப்பிடாவிட்டால் தோஷம் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top