1.ஸ்ந்தியாவந்தன மந்திரங்களை உரக்கச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வாயால் உச்சரித்தாலே போதும்.
2.அமாவாசை தர்ப்பணத்தை கிழக்குப் பார்த்து பண்ணும் வழக்கமுண்டு. சிலர் தெற்குப் பார்த்தும் பண்ணுகிறார்கள். இரண்டு ஸம்ப்ரதாயமும் உண்டு. கேட்டுக்கொண்டு பண்ணவும்.
3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபம் முன்பா பின்பா என்பதற்கு ஸம்ப்ரதாய வித்யாசமுண்டு. அஹோபில மடத்திலே உபஸ்தானம் முன்பு பண்ணுகிறார்கள். முனித்ரயத்திலே பின்பு பண்ணுகிறார்கள். இதிலும் பல வித்யாசங்கள் உண்டு. விஸ்தாரமாக பின்னர் பார்க்கலாம்.
4.ப்ராணாயாமம், காயத்ரி ஜபம் எல்லாம் காலையில் நின்று கொண்டு பண்ணவேண்டும். சாயங்காலத்தில் உட்கார்ந்துகொண்டு பண்ணவேண்டும். அர்க்ய ப்ரதானம் முதலியதெல்லாம் நின்று கொண்டு பண்ணவேண்டும் என்று கணக்கிருக்கிறது.