நாட்டேரி ஸ்வாமியின் ஶரணாகதி தீபிகா உபந்யாஸம் கேட்டு அடியேன் ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவனிடத்தில் பரந்யாஸம் பெற்றுக்கொண்டேன். அடியேன் அப்போதே தென்னாசார் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த அகத்தில் மாற்றுப்பெண்ணாக ஆகிவிட்டேன். ஆண்டவன் அடியேனின் பின்புலம் பற்றி ஏதும் கேட்காமல் பரம கருணையோடு பரந்யாஸம் பண்ணிவைத்தார். அடியேனுக்கு முதலியாண்டான் திருமாளிகையில் ஸமாஶ்ரயணம் ஆனது. இன்று சிலர் அந்த பரந்யாஸம் பலிக்காது என்றும், ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அடியேனுக்கு பரந்யாஸம் பண்ணிவைத்த ஆசார்யன் மீதும், ஸ்வாமி தேஶிகன் மீதும், எம்பெருமான் மீதும் ஶரணாகதி பலிக்கும் என்று மஹாவிஶ்வாசம் இருக்கிறது. மஹான்கள் இதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.

மறுபடியும் ப்ராயஶ்சித்த ஶரணாகதி பண்ணும் வழக்கம், நம் ஸம்ப்ரதாயத்திலும் சரி, தென்னாசார்யார் ஸம்ப்ரதாயத்திலும் கிடையாது. ஒரு தடவை ஶரணாகதி பண்ணவர்கள் மறுபடியும் ப்ரயாஶ்சித்தமாக கூட ஶரணாகதி பண்ணக்கூடாது என்று பெரியவாச்சான் பிள்ளை சாதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top