அடியோங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகிறது. வரும் சித்திரைக்குள் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) பண்ணும்படி அகத்துப் பெரியோர்கள் சொல்கிறார்கள் இல்லையென்றால் குழந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். சிலர் பெண் குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமில்லை என்றும் கூறுகிறார்கள். இதில் எது நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்களின் வழக்கத்தில் உள்ளது என்றும், எது சரி என்றும் தெளிவிக்கவும்.