வைதிக தளிகைகளை மர அடுப்பு மற்றும் கரியடுப்புகளில் பண்ணுவதற்கு முக்கிய காரணம் அக்னியைச் சேர்ப்பதற்கு முன் அந்த இடத்தை சுத்தி பண்ண முடியும் . அதே போல் அந்த அக்னியின் மூலத்தை நம்மால் பார்த்து சுத்தமாக வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தலாம்.
இதே வாயு(காஸ்) அடுப்பு என்பதில் வாயு ரப்பர் அல்லது உலோக குழாய்கள் மூலமாகத்தான் வருகிறது. அதன் மூலமான இடத்தை நம்மால் போய் சுத்தி பண்ண முடியாது. அதனால் அது ஆசாரக் குறைவு என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

