அவரவர்கள் ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்வது நல்லது. மற்ற ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்லக்கூடாது என்பதெல்லாம் கிடையாது. எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரவர் ஸம்ப்ரதாயத்தையொட்டி இருக்கும் வாழித்திருநாமத்தைச் சொல்ல வேண்டும்.
தென்னாச்சார்ய வாழித்திருநாமம் என்று ஒன்று தனியாகக் கிடையாது. அவர்கள் மணவாளமாமுனிகளுடையதைதான் சொல்லுகிறார்கள். அது ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவதில்லை. தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயத்திலேயே நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்களின் வாழித்திருநாமங்களை அவர்கள் சொல்வதில்லை. ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவது தென்னாச்சார்ய வாழித்திருநாமம் கிடையாது அது நம் ஆசார்யர் வாழித்திருநாமம்தான். இவர்கள் பொதுவான ஆசார்யர்கள் ஆகையால் தாராளமாகச் சொல்லலாம்.

