பொதுவாக ஶ்ரீராம ஜபம் உடல் சுத்தியோடு இருக்கும் போதுதான் சொல்ல வேண்டுமா? அடியேன் பொதுவாக அகத்துக் காரியங்கள், வண்டி ஓட்டும்போதெல்லாம் சொல்லுவேன். இது சரியா?

ஶ்ரீராம மந்திரம் என்ற ஒன்றிருக்கிறது அந்த மந்திரத்தை ஆசார்யனிடமிருந்து உபதேசமாகப் பெற்றுக்கொண்டு மந்த்ர ஜபமாக குளித்துச் சுத்தமாக பண்ணுவதுதான் வழக்கம். ஶ்ரீராம நாம ஜபத்தை எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். நாமமாகச் சொல்வதில் தவறொன்றுமில்லை. இவை இரண்டிற்கும் வித்யாசம் உண்டு. மந்திரத்தைச் சொல்லக்கூடாது நாமத்தைச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top