திருவாராதனத்திற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது.
மாத்யாஹ்நிக காலமென்பது காலை 10.30மணிகெல்லாம் வந்துவிடும். அந்த மாத்யாஹ்நிக காலத்தில் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு இஜ்யாராதனம் பண்ணிவிடலாம். இவையெல்லாம் காலை சுமார் 11, 11.30 மணிக்குள் பண்ணிவிடலாம். இது முடியாதவர்கள் சற்றுமுன்னரே இஜ்யாராதனம் செய்துவிடலாம். சாப்பிட்டுவிட்டு இஜ்யை பண்ணுவதைக் காட்டிலும் ரொம்ப முடியவில்லை என்றால், காலை 7.30-8.00 மணிக்குள் எம்பெருமானுக்குப் பாலோ ,தயிரோ, பழமோ வைத்து இஜ்யை பண்ணிவிட்ட பிறகு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அசக்தர்கள் முன்னமே பண்ணலாம், சக்தர்கள் காத்திருந்து காலை உணவை 11 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம்.
மாலை, இரவு வேளையிலும் பெருமாளுக்கு அமுது செய்வித்து உட்கொள்ளவேண்டும்.
தொலைதூரப் பயணம் போகுபவர்கள் கையில் எடுத்துக்கொண்டு போவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன அதனால் பொதுவாக அதற்கு அனுமதியில்லை. வேறுவழியில்லாவிட்டால் அசுத்தம் படாமல் ரொட்டி முதலாவைகளை மறைத்து (பாத்திரத்தில் இட்டு , சால்வையால் சுத்தி) எடுத்துக்கொண்டு போகலாம்.