தற்காலத்தில் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கிணற்று தீர்த்தத்திற்கு வழியில்லை. ஆனால் அனுஷ்டாங்களுக்கும் திருவாராதனத்திற்கும் தொட்டியில் இருந்து வரும் தீர்த்தத்தை எடுக்கக் கூடாது என்று பல பெரியோர்களும் சொல்லக் கேட்கிறோம். அப்படியானால் நகரத்தில் வசிக்கும் அடியோங்கள் மாதிரி பல பேருக்கு பகவத் ஆராதனம் செய்ய வழியே இல்லையா ஸ்வாமி?

திருவாராதனம் பண்ணாமல் இருக்கக்கூடாது, முடிந்தளவு ஆசாரத்துடன் ஆராதனம் பண்ணவேண்டும். கிணற்று ஜலம் இல்லாவிட்டல் தனியான Direct Borewell ஜலம் அல்லது அதுவும் முடியாவிட்டல், முடிந்தவரை அசுத்தம் கலக்காத ஜலத்தை வைத்துப் பண்ணவேண்டியது.
குறிப்புகள்:
அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் திருவாராதனத்திற்கு முடிந்தளவு சுத்தமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து செய்தல் வேண்டும். நம்மகத்தில் இல்லையென்றால் பக்கத்தில் எங்கேயாவது கிணறுயிருந்தால் அங்கே சென்று ஒரு குடம் எடுத்துவந்து செய்யலாம். கிணறு இருக்கும் அபார்ட்மெண்டிற்கு மாறலாம். அல்லது Borewellல்லிருந்து tankக்குப் போகாமல் ஒரு Pipe இருக்குமாகில் அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் நாம் எந்தளவு சுத்தமாகச் செய்ய நினைக்கின்றோமோ அந்தளவு எம்பெருமான் நமக்கு வழிவகுப்பான். மனமிருந்தால் மார்கம் உண்டு என்பது போல். திருவாராதனம் விடாமல் பண்ணவேண்டும். சுத்தமான தீர்த்தமெடுத்து பண்ணுவதுதான் மிகவும் நியாயமானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top