பெரியவர்கள் வழக்கமென்பது நித்யபடி நாட்களில் (ஶ்ரார்த்தாதி நாட்களைத் தவிர) சாப்பிடுவதற்குமுன் ஒரு கம்பளியில் மடித்துவைத்துவிட்டால் அது மடிவஸ்திரமாகும். அமாவாஸ்யை, தர்ப்பணங்கள் போன்ற நாட்களில் இரண்டு சூர்யன் படக்கூடாது என்பதால் ஒன்று அஸ்தமனம் ஆனபின் உலர்த்துவார்கள். அமாவாஸ்யை போன்ற நாட்களில் மதியம் 12 மணிக்கு மேல் தர்ப்பணம் பண்ணுவதால் காலையில் எழுந்து உலர்த்துவார்கள். கீழேயிருக்கும் மிதியடி, திரைச்சீலையெல்லாம் துணியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துணியாக இருந்தால் அதன் மேல் படாமல் இருப்பதுதான் சரியானது. சாக்குக்குக் கிடையாது என்றாலும் சணல், சாக்கு போன்றவற்றிற்கு ஒருவிதமான தீட்டு இருப்பதால் அதைத் தொட்டுவிட்டு பெரியவர்கள் திருவாராதனம் பண்ணும்வழக்கமில்லை.