மடி என்பது வஸ்திரம் விழுப்பில்லாமல் இருப்பது என்று புரிகிறது. அதாவது முந்தைய நாள் இரவு நனைத்து உலர்த்தி மறுநாள் காலை ஸ்நானத்திற்குப் பிறகு எடுத்து உடுத்திக் கொள்வது. பகலில் துவைத்து உலர்த்திய வஸ்திரங்களை விழுப்பில்லாமல்(படுக்கையில் படுக்காமல்) மடியாகவே இருந்து எடுத்து வைத்தால் அது சரியாகுமா ஸ்வாமி. இடையில் கால் மிதியடி/திரைச்சீலை ஆகியவற்றைத் தொடுவதால் மடி குறைந்துவிடுமா? குடும்பத்தில் மற்றவர்கள் (குளித்திருந்தாலும்) மீது படுவதாலும் மடி குறைந்துவிடுமா. சணலில் செய்த கோணியை மிதியடியாக பயன்படுத்தினால் விழுப்பு இல்லை என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். அது வாஸ்தவம் தானா ஸ்வாமி.

பெரியவர்கள் வழக்கமென்பது நித்யபடி நாட்களில் (ஶ்ரார்த்தாதி நாட்களைத் தவிர) சாப்பிடுவதற்குமுன் ஒரு கம்பளியில் மடித்துவைத்துவிட்டால் அது மடிவஸ்திரமாகும். அமாவாஸ்யை, தர்ப்பணங்கள் போன்ற நாட்களில் இரண்டு சூர்யன் படக்கூடாது என்பதால் ஒன்று அஸ்தமனம் ஆனபின் உலர்த்துவார்கள். அமாவாஸ்யை போன்ற நாட்களில் மதியம் 12 மணிக்கு மேல் தர்ப்பணம் பண்ணுவதால் காலையில் எழுந்து உலர்த்துவார்கள். கீழேயிருக்கும் மிதியடி, திரைச்சீலையெல்லாம் துணியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். துணியாக இருந்தால் அதன் மேல் படாமல் இருப்பதுதான் சரியானது. சாக்குக்குக் கிடையாது என்றாலும் சணல், சாக்கு போன்றவற்றிற்கு ஒருவிதமான தீட்டு இருப்பதால் அதைத் தொட்டுவிட்டு பெரியவர்கள் திருவாராதனம் பண்ணும்வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top