வபனம் செய்து கொண்ட பின் கண்டிப்பாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா ஸ்வாமி? நகரங்களில் சர்வாங்க க்ஷௌரம் செய்துகொள்ள கடினம் என்பதால் முகத்தில் மட்டும் செய்துகொள்வது சரியாகுமா. சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்பு மட்டும் சர்வாங்கம்(இடுப்பு அளவு மட்டுமே) செய்து கொள்ள முடிகிறது. இது சரியானதா ஸ்வாமி.

வபனத்திற்குப் பிறகு பூணூல் மாற்றிக்கொள்வதென்பது இன்றளவும் சிஷ்டாசாரத்தில் இருக்கிறது. எப்படியும் வபனம் செய்யும்போது இதர ஸ்பர்ஶம் பூணூலில் படுவதால் அதை மாற்றிக்கொள்ளும் வழக்கமிருக்கிறது. நகரங்களில் சர்வாங்கம் பண்ணுமளவு வசதிகள் இல்லையென்றாலும், பல பெரியவர்கள் எங்கே சர்வாங்கம் பண்ணும் மனுஷ்யர்கள் இருக்கிறார்களோ அங்கே சென்று பண்ணிக்கொள்கிறார்கள். இப்பவும் சில ஊர்களில் அதற்கான மனுஷ்யர்களுக்கு நிரவதிகமாக அவர்கள் கேட்கும் பைசாவைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தர்மானுஷ்டானத்திற்காக பைசா செலவு செய்வதில் தவறில்லை.
இடுப்பு மட்டும் பண்ணிக்கொள்வதென்பது ஶாஸ்திரங்களில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top