கோவிலில் கைங்கர்யத்திற்குப் போகும்போது சுத்தமாகச் செல்லவேண்டும். சேவார்த்திகளின் மேலே பட்டால் தோஷமில்லை. மற்றவர்காள் மேலே பட்டால் பாதிவழியில் தீர்த்தமாடுவதெல்லாம் கிடையாது. யார் மேலையும் படாமல் செல்லவேண்டும். மந்திர ஸ்நானம் பண்ணிக்கொள்வதென்பதெல்லாம் ரிஷி சந்தஸ் சொல்லி செய்வதில்லை. சங்கலபம் உண்டு. மந்திரம் சொல்லிதான் ஸ்நானம் செய்யவேண்டும்.
குறிப்புகள்:
நாம் சுத்தமாகப் போகவேண்டுமென்றால் அதற்குத் தகுந்தாற்போல் ஜாக்கிரதையாகச் செல்லவேண்டும். கோவில் வாசலில், உள்ளே சென்றபின் கூட்டமாக இருந்தால் என்ன செய்வது , மேலே படும்படி நேர்ந்தால் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள்.