கோவில்களில் கைங்கர்யத்திற்குச் செல்லும் போது முடிந்தவரை மடியாக செல்கிறோம். எனினும் இடையில் யார் மீதாவது பட நேர்ந்தால் கோவிலில் சென்று தீர்த்தமாட முடியவில்லை. இந்தச் சமயத்தில் லகுவாக மந்த்ர ஸ்நானம் (ஆபோஹிஷ்டா மந்திரங்களைச் சொல்லி ப்ரோக்ஷணம்) மட்டும் செய்யலாமா? மந்த்ர ஸ்நானத்திற்குச் சங்கல்பம் உண்டா? அல்லது ரிஷி சந்தஸ் தேவதைக்குப் பிறகு மந்திரத்தை மட்டும் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொண்டால் போதுமா ஸ்வாமி?

கோவிலில் கைங்கர்யத்திற்குப் போகும்போது சுத்தமாகச் செல்லவேண்டும். சேவார்த்திகளின் மேலே பட்டால் தோஷமில்லை. மற்றவர்காள் மேலே பட்டால் பாதிவழியில் தீர்த்தமாடுவதெல்லாம் கிடையாது. யார் மேலையும் படாமல் செல்லவேண்டும். மந்திர ஸ்நானம் பண்ணிக்கொள்வதென்பதெல்லாம் ரிஷி சந்தஸ் சொல்லி செய்வதில்லை. சங்கலபம் உண்டு. மந்திரம் சொல்லிதான் ஸ்நானம் செய்யவேண்டும்.
குறிப்புகள்:
நாம் சுத்தமாகப் போகவேண்டுமென்றால் அதற்குத் தகுந்தாற்போல் ஜாக்கிரதையாகச் செல்லவேண்டும். கோவில் வாசலில், உள்ளே சென்றபின் கூட்டமாக இருந்தால் என்ன செய்வது , மேலே படும்படி நேர்ந்தால் பரவாயில்லை என்றும் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top