உறவினர்களில் நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் பற்றி அதிகம் தெரியாத போது அவர்கள் பரமபதித்தால் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது. பங்காளிகள் என்று தாத்தா காலத்தில் சொன்னவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் என்று தெரிந்தாலும் எத்தனைத் தலைமுறை என்று சரியாக தெரியாத போது 10 நாட்கள் அனுஷ்டிக்க வேண்டுமா. அல்லது 3 நாட்கள் அனுஷ்டித்தால் போதுமா. பொதுவாக உறவு என்று தெரிந்தாலும் துல்லியமாக அவர்கள் இன்னவகையில் உறவு என்று தெரியாவிட்டால் அந்தச் சமயத்தில் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது? இந்த மாதிரியான குழப்பமான சூழ்நிலைக்கு என்று உபாயம் ஏதும் உள்ளதா?

அவர்கள் எத்தனை நாள் பங்காளிகள் என்று தெரிந்துகொண்டு ஆஶௌசம் அனுஷ்டிப்பதுதான் உத்தமமான கல்பம், தெரியாமல் எப்படித் தீட்டை அனுஷ்டிப்பது?. அகத்தில் பெரியவர்கள் யாரேனும் இருந்தாலோ, அவர்கள் எழுதிவைத்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தாலோ, கூடியிருந்து பேசிப்பார்த்தாலோ தெரியும். அதற்காகதான் தலைமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வது. இவர்கள் பங்காளிகள் என்று தெரியவில்லை என்றால் அது வேறு , எத்தனை நாள் பங்காளித்வம் என்பதை அவசியம் தெரிநதுகொண்டு அனுஷ்டிப்பதே சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top