அவர்கள் எத்தனை நாள் பங்காளிகள் என்று தெரிந்துகொண்டு ஆஶௌசம் அனுஷ்டிப்பதுதான் உத்தமமான கல்பம், தெரியாமல் எப்படித் தீட்டை அனுஷ்டிப்பது?. அகத்தில் பெரியவர்கள் யாரேனும் இருந்தாலோ, அவர்கள் எழுதிவைத்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தாலோ, கூடியிருந்து பேசிப்பார்த்தாலோ தெரியும். அதற்காகதான் தலைமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வது. இவர்கள் பங்காளிகள் என்று தெரியவில்லை என்றால் அது வேறு , எத்தனை நாள் பங்காளித்வம் என்பதை அவசியம் தெரிநதுகொண்டு அனுஷ்டிப்பதே சரி.