அடியேன் சின்ன ஜீயர் USA ஏளியிருந்தபோது அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டேன். அடியேனின் அகத்துக்காரரின் குடும்பத்தவர்களின் கொடியாலம் தாதாசார்யாரை ஆசார்யனாகக் கொண்டவர்கள். எனது பெற்றோர்கள் ஸ்ரீமதாண்டவன் சிஷ்யர்கள். எப்போது பாரதம் வருவோம் என்று தெரியாததனால் சின்ன ஜீயர் இங்கே ஏளியிருந்தபோது அவரிடம் ஸமாஶ்ரயணம் செய்துகொண்டேன். மேலும் என் அகத்துக்காரருக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. நான் பரந்யாஸமும் செய்யவேண்டுமா?

நீங்கள் வடகலையார் அகத்து நாட்டுப்பெண் என்று தெரிகிறது. ஆகையால் பரஸமர்ப்பணம் அவசியம் பண்ணிக்கொள்ளவேண்டும். இன்னொருமுறை அவர்களின் சொந்த ஆசார்யரிடம் ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதில் தவறில்லை. பாரதம் வந்து நீங்களும் உங்கள் அகத்துக்காரரும் அவர்களின் ஆசார்யரிடம் இரண்டும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்கொள்வதுதான் உத்தமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top