நீங்கள் வடகலையார் அகத்து நாட்டுப்பெண் என்று தெரிகிறது. ஆகையால் பரஸமர்ப்பணம் அவசியம் பண்ணிக்கொள்ளவேண்டும். இன்னொருமுறை அவர்களின் சொந்த ஆசார்யரிடம் ஸமாஶ்ரயணம் பண்ணிக்கொள்வதில் தவறில்லை. பாரதம் வந்து நீங்களும் உங்கள் அகத்துக்காரரும் அவர்களின் ஆசார்யரிடம் இரண்டும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்கொள்வதுதான் உத்தமம்.