கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு இன்று அரிதாக இருக்கிறது அதிலிருந்து மாறியது போல், நாங்கள் வெளியில் சாப்பிடுவதும், வெங்காயம் சாப்பிடுவதும் இக்காலத்திற்கேற்ற மாற்றம் என்று ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள் என்று பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது?

கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு முதலியது ஆசாரம் ஸம்பந்தப்பட்டது. முடிந்தளவு கடைப்பிடிக்கலாம். ஆனால் வெங்காயம் சாப்பிடக்கூடாது என்பது ஶாஸ்திரம், அதைக் கடைப்பிடிக்காவிட்டால் பாபம் உண்டு, கள்ளு கூடிப்பது போல் இது.
குறிப்புகள்:
ஆகார சுத்தியிருந்தால்தான் மனசு சுத்தமாக இருக்கும். ஆஹார ஶுத்தௌ ஸத்வ-ஸுத்தி: ஸத்வ-ஶுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி: என்பது வாக்கியம். நம் ஆஹாரம்தான் நம் எண்ணங்களை உருவாக்குகிறது ஆகையால் வெளியில் சாப்பிடுவதைக் கட்டாயம் நிறுத்தவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top