சாயம் சந்தியாவில் சூர்யன் கொஞ்சம் இருக்கும்போதே அர்க்யமும் நக்ஷத்ரம் உதித்தபின் உபஸ்தானம் என்பது வழக்கம். மற்ற நாட்களில் 108 காயத்ரி செய்வதென்றால் ப்ரதோஷத்தன்று 10 காயத்ரி தானே பண்ணமுடியும் அதுவரை காத்துக்கொண்டிருக்கணுமா என்று கேட்பதுபோல் தெரிகிறது. பெரியவர்கள் காலத்தில் அர்க்யத்தைக் கொடுத்துவிட்டு 10 காயத்ரி செய்துவிட்டு உபஸ்தானம் வரை காத்திருப்பார்கள். இல்லையென்றால் அர்க்ய ஸமர்ப்பணமும், உபஸ்தானமும் முன்னபின்ன நேரமானாலும் தவறில்லை. ப்ரதோஷமன்றும் காலத்தில் சந்தியாவந்தனம் செய்வது வேண்டும்.