மஹாநதிகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். அதற்காக வேறு ஒரு இடத்தில் ஸ்நானம் செய்யவேண்டுமென்ற நிர்பந்தமில்லை. அந்த நதியிலேயே முதலில் குளித்துவிட்டு அதனால் தீட்டு போய்விடும், அதன்பின் மீண்டும் சங்கல்பம் செய்து மறுபடியும் குளிக்கலாம், நதியில் ஜலம் ஒடிக்கொண்டுதானே இருக்கும் அதனால் அது புது ஜலமாகிவிடும்.
ஸமுத்திர ஸ்நானம் செய்யும்முன் வேறு ஒரு இடத்தில் தீர்த்தமாடிவிட்டு ப்ரவேசிப்பதுதான் வழக்கம். தீட்டோடு ஸமுத்திர ஜலத்தைத் தொடக்கூடாது என்றிருக்கிறது.