பவித்ரத்தை வலதுகாதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ப்ராஹ்மணரின் வலதுகாதில் கங்கை இருக்கிறாள் என்பதினால். அது சுத்தமான இடமானபடியினாலும், நதியிருப்பதாலும் அங்கே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது கீழே விழக்கூடும் என்பதினால் தட்டில் வைத்து ஆசமனாதிகள் செய்து மீண்டும் போட்டுக்கொள்ளலாம்.