அடியேனின் அகத்தில் 8 சாளக்கிராம பெருமாள் ஏளியிருக்கிறார். எங்கள் நண்பர் மற்றுமொரு சாளக்கிராம பெருமாள் அளிக்க விரும்புகிறார்.அவரை நாங்கள் ஏளப்பண்ணிக்கொள்ளலாமா? சிலர் ஒற்றைப்படையில் கூடாது என்கிறார்கள். வேறு சிலர் அவரைத் தனியாக வேறு பெட்டியில் ஏளப்பண்ணவேண்டும் என்கிறார்கள். எது சரி ஒற்றைப்படையில் சாளக்கிராம மூர்த்தியை அகத்தில் வைத்துக்கொள்ளக்கூடாதா? தெளிவிக்கவும்.

ஒரு சாளக்கிராம மூர்த்தி வைத்துக்கொள்ளலாம். 2 , 3 மூர்த்திகள் வைத்துக்கொள்ளக் கூடாது. நான்கில் ஆரம்பித்து எத்தனை வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாலுக்கு மேல் ஒற்றைப்படை இரட்டைப்படை என்ற கணக்குக்கிடையாது. 9 ஒற்றைப்படை என்று தோன்றினால் கூடியச் சீக்கிரம் மற்றொரு மூர்த்தியையும் ஏளப் பண்ணிக்கொள்ளலாம். வேறு பெட்டியில் வைப்பதென்பதெல்லாம் நிர்பந்தமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top