ப்ரபந்தம் அல்லது வேத வகுப்புகளை வெளிநாட்டில் இருந்து கற்றலோ அல்லது கற்பித்தாலோ விடியற்காலை அல்லது இரவு பொழுதில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில் எழுந்தவுடனே இணைந்துகொள்ள வேண்டியிருப்பதால் ஸ்நானத்திற்கு முன்பு ப்ரபந்தம்/வேதம் சொல்லிக் கொள்வதிலோ அல்லது சொல்வதிலோ தோஷம் உண்டா? அதே போல இரவில் (9 மணி அளவில்) சொல்லிக் கொண்டால் மடியாக இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. சந்தைக்கு மடி நியமம் உண்டா?

ப்ரபந்தம் மற்றும் வேதங்களை விடியற்காலையில்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியிருக்க குளித்துவிட்டுதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. தூக்கம் நன்றாகப் போக பல் தேய்த்து விட்டு, . கை, கால் அலம்பி சொல்லிக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் பிம்மாலைப்பொழுதில்தான் சொல்லிக்கொடுப்பார்கள். இரவு வேளையில் என்று கேட்டால் கற்றுக்கொள்வதற்கு மடி நியமமில்லை. ஒரளவு பார்க்கமுடிந்தால் பார்ப்பது நல்லது. சுத்தமாக இருந்து கற்றுக்கொள்வதே முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top